Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
கண் நம் உணர்ச்சிகளின் பெட்டகம்!!

பெண்ணின் கண்கள் அதிசயங்கள் அல்ல! அதில் பல அர்த்தங்கள் உள்ளது.

கண்  ஒருவரின் தூக்கம், அழுகை,  சிரிப்பு, வேதனை, அன்பு, என்று அனைத்து உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் பிம்பம்💖 👀💖.

இதழ் மொழி பேசும் வார்த்தையில் பொய் காணலாம், ஆனால் விழி மொழியில் பொய் அன்றி மெய் காணலாம்.🌹

ஆணின் மனதை கட்டி இழுக்கும் மந்திரம் பெண்ணின் கண்கள்.🫠

என்னவனின் எண்ணத்தை 🫂 🌹 அவன் உறைக்காமல் புரிந்து கொள்ளும் மாயை என் கண்கள்.

நானும் கண்ணியமாகத்தான் இருந்தேன் அவன் கண்களை காணும் வரையில்.

பெண்ணின் விழி மொழிகளை அறியும் ஆண்கள் பாக்கியசாலிகள்💖💖
2
என் விழி
பார்த்து அவன் கதைத்திடும் பொழுதினில் அவன் விழி நோக்கி என் மெய் சிலிர்க்கும்....
 
என் விழியை என்னவன் அவன் நோக்க
அவன் விழியை நான் நோக்க
என் விழி பார்த்து அவன் உயிர் வாழ்கிறது  என்பான்....

பெருங்கோபம் தகிக்கும் என்னவன் விழி சிவந்தால்

பேரன்பு ஊற்றெடுக்கும் அவன் விழி கனிந்தால்......

மழை மேகம் பொழியும் அவன் கருவிழி நனைந்தால்....

இத்தனை ஜாலங்களை இருவிழிகளில் காட்டி
அவன்
என் மை இட்ட கருவிழி கண்களை
கரு மேகம் சூழ் நிலா என்பான்

விழி மூடி  இமைக்கும் இமையை வண்ணத்துப் பூச்சி என்பான் பைத்தியக்காரன்..
ஆம் என்னுடைய பைத்தியக்காரன் அவன்......
3
Aval kangalil poosum kan mai ennai vasiyam seiyum vasiya maigal .
kangal iradum goli gundugal .
kangal ennai erkum iru kandhangal .
kangalil irukum karu vizhi enna padamedukum padakruvi.

Kangal ennai kollum parvayai kondavai.
Kannerai konda kangal aruviyai ponrathu.
kangal mugathil irukum iru oviyam.
kangal aga mothathil kangal en uyirai parikum sakthiyagum .❤️❤️😍😍
4
Inspired from ‘Pesaa madandhaiye.. vizhi pesum chithirame’ mozhi movie


அவன் பற்களை காட்டிச் சிரித்தான்
இவள் கண்களை விரித்துச் சிவந்தாள் - சாலையில்

அவன் பின்னால் இடித்து நின்றான்
இவள் கண்ணால் அனலைத் தெறித்தாள் - பேருந்தில்

அவன் போலாம் வரியா என்றான்
இவள் கண்ணைச் சுருக்கி கடந்துச் சென்றாள் - ஆட்டோ ஸ்டாண்டில்

அவன் குறுக்கே மறித்து நின்றான்
இவள் கண்களால் முறைத்துப் பார்த்தாள் - ரோட் சைட் ரோமியோ

அவன் வந்துவிட்டாயா கண்ணம்மா என்றான்
இவள் கண்களில் காதலைத் ததும்ப விட்டாள் - வீட்டில் கணவன்

அவன் கட்டிக்கொண்டு முத்தமிட்டான்
இவள் கண்களால் அரவணைத்து அன்பைச் சொரிந்தாள் - அவளின் குழந்தை

அன்பு விழிகள் அவளின் அன்பிற்குரியவர்களுக்கு…

அனல் விழிகள் அவளை கேவலம் பெண் என்று நினைப்பவர்களுக்கு…

ஊமைப் பெண்ணின் கண் பேசும் வார்த்தைகள் அவை!!!
5
கண்கள் நம் இந்த உலகத்திற்கு வந்து முதலில் ஒருவரின் ஸ்பரித்ததை உணர்வோம் அடுத்து நம்ம முதலில் கண்களால் பார்க்கும் முதல் முகம் அம்மா
அடுத்து அம்மாவின் சிரிப்பு அழுகை ஆச்சிரியம் கோபம் இவைகள் தான் முதலில் கண்களால் பார்த்து பதிய வைத்து நம் உணர்வுகளால் உரைக்குறோம்
ஒருவரின் உணர்வுகளை அவர்கள் கண்கள் மூலம் கண்டுகொள்ளலாம் அழுகை சிரிப்பு வேதனை அதிசயம் ஆச்சிரியம் கோவம் கருணை
வெட்கம்
இவ்வளவு வருடங்கள் கண்கள் பார்க்க படிக்க என்று இருந்தேன் ஆனால் ஒரு நாள் என்னவனை கண்டபின் இந்த பிறவின் பலனை அடைந்தேன் என்றே எண்ணினேன் அவன் என்னை பார்க்கவில்லை என்று கவலை கொள்ள வில்லை

அவனின் கண்களில் ஆயிரம் ஆயிரம் உணர்வுகள் தோன்றும் பல முகம்களை பார்த்தாலும் அவனின் முகம் என்றும் என் கண்களின் அவன் பிம்பம் நீங்காது மனதால் அவனை மறந்தாலும் பல வருடம் கடந்து வந்தாலும் என்னவனை கண்டால் கண்களில் ஒரு மகிழிச்சி வருவதை கண்டுகொண்டேன்
அந்த சூரியனின் சுட்டு எரிக்கும் ஒளியை அவனின் கோவ பார்வையில் கண்டேன்
பாசம் காடும் பொழுது இரவில் தோன்றும் நிலவை போல் குளுமையாக இருக்கும்
ஆண்கள் வெக்க படும் தருணத்தை எனது கண்களால் பார்த்த நொடி நான் புதிதாய் பிறந்த தருணத்தை உணர்தேன்
அவனின் அழுகையை காணுகையில் ஆண்டவனின் இடம் ஏன் எனக்கு கண்களை படைத்தாய் என்று அவனிடம் சண்டை இடுகிறேன்
என்னவன் உடன் இருக்க முடியவில்லை என்றாலும் அவனை தூரத்தில் இருந்து பார்த்தாலே என்னது கவலைகளை மறந்து வாழ்கையின் அடுத்த நொடியே ரசிக்குறேன்


என்றும் அவனின் கந்தர்வர் காதலி கண்களால் காதல் செய்யும் காந்தக்கண்ணழகி
[/b]
6
கவிதைகளுக்கு ஓர் கவிதை
கவிதை எழுத நான்....! 😉
தூரிகையாய் இமைகள்...🖌️
கண்ணுக்கு  அழகு மை என்பதெல்லாம் பொய் என்றுணர்ந்தேன் என்னவளின் கயற்விழிகளை 👀 கண்ட அந்த நொடி.....!
அவள் விழிகளை பார்க்கவே அஞ்சி நடுங்குகிறேன்....
அதன் ஈர்ப்பியியலில் சிக்கி மீள முடியாமல் போகுமோ என தவிக்கும்
என் விழிகளின் வேண்டுதலுக்காக.....
கோபம் தகிக்கும் செஞ்சுடராய் .....!⚡
அன்பு ஊற்றெடுக்கும் தண்மதியாய்.....!🌝
விழுந்தவர் மீள முடியா ஆழியாய்......!🌊
பகைவரும் அஞ்சும் செவ்வேலாய்.....!🔱
தன் மானம் சீண்டும் யாவரையும் சுட்டெரிக்கும் தீச்சுவாலையாய்.....!🔥
காண்பவர் யாவரும் வீழும் மாயவலையாய்....!
அவ்விரு விழிகளில் பல ஜாலம் காட்டும் மாயக்காரி அவள்......🧚
7
காந்தத்தை கண்க்களாகக்கொண்ட கண்ணியே
என்னை கவருவதெனோ ...
காட்டுக்குள் சுற்றி திரிந்த எனக்கு
கனவுகளை காட்டியதெனோ...
கனவிலும் நீயே வந்தெண்ணை
கட்டி அணைத்து தழுவுவதெனோ...
என் கண்களை திறக்கும்போது கணவாய்
மட்டுமே நீ களைந்துப்போவதெனோ ...

என்னுள் இருக்கும் எண்ணவள்ளுகாக
உன்னுள் இருக்கும் உண்ணவன் ❤️❤️❤️
8
அவனின் கண்கள்
சாதாரணம் போலத் தோன்றினாலும்,
அதில் ஒளிந்தது என் உலகம்.

ஒரு பார்வை போதுமே,
என் உயிர் வழியே நடந்து போக அவன்.
அவனின் பார்வை என்னைத் தீண்டும் போது,
நான் என்னவாகிறேன் தெரியாமலே நனைந்துவிடுகிறேன்.

அவனின் கண்கள்,
காதல் சொல்லாது… ஆனால் காதலை உணர்த்தும்.
வாக்குகள் இல்லாமலே,
வார்த்தைகளை விட அதிகம் பேசும்.

அவனின் விழிகளில் நான் என்னைக் காண்கிறேன்,
அவன் கனவுகளிலும் நான் வாழ்கிறேன்.
அவன் பார்வையில் ஒரு புன்னகை,
என் நாளையே மழையாக மாற்ற capable.

கண்கள் மட்டும் தான் அவனுக்கு,
ஆனால் எனக்கு அது கவிதை.
அவனின் பார்வையில் என் கவிதை எழுதப்படுகிறது,
ஒவ்வொரு முறையும்,
அவன் என்னை பார்க்கும்போது.
[/color]


 





9
கண்கள் இரண்டும் தீவிர மொழி,
கருவிழியில் காதல் ஒரு பொழி.
மௌனத்தில் பேசும் பார்வை,
உயிரோடு வாழும் ஓர் நிழலை. அழகு அங்கே முகத்தில் இல்லை,
அது சுழலும் பார்வை சொன்னதைப் பார்.
பாவனைகள் எல்லாம் மறைந்து,
ஒரு நிழலாக நெஞ்சில் நிறைந்து. நீ நடந்த பாதையில் ஒளி வீசி,
நிழல் உன்னைத் தொடர்ந்தது காட்சி.
அது சுமை அல்ல, நினைவு தான்,
உயிர் கொண்ட ஓர் கனவு தான். நெற்றி நடுவே ஒரு புள்ளி பேச,
நேர்கண்ணில் நிஜங்கள் நூறு பேச,
நிழல் கூட உயிராய் விழிகள் சேது சேர்கிறது.
வேண்டுமானால் இன்னும் தொடரலாம்
10
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 22 💫
✨💐Nizhal🌹Uyir🌹Aagirathu💐Season 22 💫
விதிமுறைகள்:

1) நிழல் உயிராகிறது கவிதை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, பயனர்கள் தங்களது முகவரியினை இத்தளத்தில் பதிவு செய்திருத்தல் அவசியம்...

2) மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கு தகுந்தவாறு கவிதைகள் அமையப்பட்டிருக்க வேண்டும்...

3) பதிவு செய்யப்படும் கவிதைகள் தங்களது சொந்த  படைப்புகளாக இருக்க வேண்டும்..

4) வேறு ஒருவரின் படைப்புகளாக அறியப்படும் பட்சத்தில் படைப்புகள் முன்னறிவிப்பின்றி நீக்கப்படும். மேலும் அதற்கான முழு பொறுப்பினையும் பயனர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழினி FM குழுவிற்கு அதில் எவ்வித பொறுப்பும் இல்லை..

5) இங்கு பதியப்படும் கவிதைகள் குறைந்தபட்சம் 15 முதல் 40 வரிகள் இருக்க வேண்டும்..

6) முதலாவதாக பதியப்படும் எட்டு கவிதைகள் மட்டுமே நிழல் உயிராகிறது நிகழ்ச்சியில், தமிழினி Fm இடம்பெறும்..

7) முதலில் கவிதையினை பதிவு செய்யும் பயனருக்கு பரிசு பாடல் Tamil club chat மூலம் நிகழ்ச்சியின் இறுதியில்  வழங்கப்படும்..

8) நிழல் உயிராகிறது கவிதை நிகழ்ச்சி நமது தமிழினி fm-யில் வெள்ளிக்கிழமைகளில் ஒலிபரப்பு செய்யப்படும்..

9) ஒலிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சியின் முடிவில் அடுத்த வாரத்திற்கான தலைப்பு  வழங்கப்படும்

Terms:

1) In order to participate in the Nizhal uyiragirathu program, users must have registered their id on the forum site...

2) Poems should be written as per the photograph given above…

3) Poems to be entered here must be their own work.

4) Works will be removed without notice if found to be the work of someone else. And users have to accept full responsibility for it. Tamizhini FM team has no responsibility in it..

5) The poems posted here should be at least 15 to 40 lines long.

6) Only the first eight poems posted will be featured in the show "Nizhal Uyiragirathu " on Tamizhini Fm.

7) The user who registers the poem first will be given a prize song at the end of the program through Tamil club chat.

8) Nizhal Uyiragirathu program will be aired on Fridays on our Tamizhini fm..

9) Next week's topic will be given at the end of the program..
By
Thamizhini Team
Pages: [1] 2 3 ... 10